சனி, டிசம்பர் 29, 2012

மொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை !

கும்பளா(கேரளா):மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். கும்பளாவில் நடக்க கூட முடியாமல் சோர்ந்து போய் இறக்கிவிடப்பட்ட பெண், அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அனாதை
நிலையத்திற்கு கொண்டு போகுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவரும் ஒரு காம வெறிப்பிடித்த கயவன் ஆவான். அவன், இப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துஸ் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் இரவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்வழக்கில் கும்பளாவில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான கணேஷனை போலீஸ் கைது செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் கன்யானா பகுதியை சார்ந்த இளம்பெண், தந்தை மரணித்தவுடன், தாயார் மறு திருமணம் புரிந்துள்ளார். இதனால், மங்களூரில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பொழுது ஃபோனில் அறிமுகமான இளைஞர், அப்பெண்ணை உப்பளாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
உப்பளாவிற்கு வந்த பொழுது அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டு ரெயில்வே ஸ்டேசனில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பெண் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் கணேஷனிடம் தன்னை அனாதை நிலையத்திற்கு கொண்டு விடுமாறு கூறிய பொழுதும், கணேஷன் அந்த பெண்ணை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் கூறுகிறது.
கணேஷன் அழைத்து சென்ற வேறு சிலரும் அந்த பெண்ணை வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்பதாக குற்றம் சாட்டி டி.ஒய்.எஃப்.ஐ தர்ணா போராட்டம் நடத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக