ஞாயிறு, டிசம்பர் 23, 2012

போதையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்:கொலையாளி சுப்பையா !

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி புனிதாவை குடிபோதையில் பலாத்காரம் சென்று கொலை செய்ததாக கொலையாளி சுப்பையா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசிடம் அளித்திருக்கும் வாக்குமூலத்தில், குடி போதையில் தாம் தாதன்குளம் ரயில்நிலையத்தை வந்தடைந்ததாகவும் இரவு முழுவதும் அங்கேயே உறங்கியதாகவும் கூறினான். பின்னர் காலையில் எழுந்து எஞ்சியிருந்த மதுவையும் குடித்துவிட்டு நடந்தபோது மாணவி புனிதா அந்த வழியே சென்றிருக்கிறார். போதையின் உச்சத்தில் இருந்த தாம் அந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனதால் தம்மை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி கொலை செய்தேன் என்று கூறியுள்ளான். தமிழகத்தில் மதுபோதையால்தான் கொலை, கொள்ளைகள், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளி மதுவின் உச்சத்தால் கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக