புதன், டிசம்பர் 26, 2012

வெடிகுண்டு நிரப்பிய காரை பள்ளி குழந்தைகள் மீது மோத முயன்றவன் சீனாவில் கைது !

சீனாவில், பள்ளி சிறார்கள் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில், 13 சிறுவர்கள், காயமடைந்துள்ளனர். சீனாவில் சில நாட்களுக்கு முன், ஹெனான் மாகாணத்தின், வென் ஷு நகருக்கு அருகே உள்ள, செங்பெங் கிராம பள்ளியில் நுழைந்த நபர், 22 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்தினான்.இதற்கிடையே, நேற்று,ஹுபி மாகாணத்தில், கார் நிறைய வெடிமருந்தை ஏற்றி வந்த மர்ம ஆசாமி, குழந்தைகள் மீது காரை
மோதினான். இதில், 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர். காரை மோதி, வெடிக்க செய்ய இவன் முயற்சித்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நபருடைய மகள் கொல்லப்பட்டாள். இதனால், மன நிலை பாதிக்கப்பட்டு, இந்த தகாத செயலில், இவன் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக