வெள்ளி, டிசம்பர் 28, 2012

பெண் போராட்டக்காரர்கள் அழகானவர்கள்: சர்ச்சையை கிளப்பினார் பிரணாப் மகன் !

டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும் பெண்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் அழகாக இருக்கிறார்கள், டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள். டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ
நிச்சயம் ஒப்பிட முடியாது. அது புரட்சி, இது வெறும் போராட்டம். மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராட்டம் நடத்துவது, டிஸ்கோ கிளப்புகளுக்குப் போவது இதையெல்லாம் நாம் மாணவர் பருவத்திலேயே செய்துள்ளோம். அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டெல்லியில் பல அழகான இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டிவிகளுக்குப் பேட்டி தருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள்.
இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார்.
பிரணாப் முகர்ஜி மகனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் அமைப்புகள் அபிஜித் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக