வெள்ளி, டிசம்பர் 28, 2012

அமெரிக்காவில் கடும் பனி: 6 பேர் பலி, விமான சேவைகள் ரத்து !

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நிலவிவரும் கடும் குளிர் மற்றும் பனிப்புயலில் சிக்கி இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி, அலபமா ஆகிய மாநிலங்களில் உறைபனி கொட்டி வருகிறதையடுத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்து வரும் 24 மணிநேரத்திற்குள் 46 செ.மி உயரத்திற்கு பனிகொட்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நியூயோர்க்கை நோக்கி பனிப்புயல் நகர்வதால், அங்கு பாரிய பனி மூட்டம் இருக்குமெனவும், கடும் குளிர் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஃபுளோரிடா, கோல்ஃப் கோஸ்ட் மற்றும் நியூ இங்கிலாந்து ஆகிய பகுதிகளுக்கும் கடும் குளிர் பரவியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக