சனி, நவம்பர் 08, 2014

சென்னை உயர்நீதிமன்றம்......! ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத  பேரணிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக