திங்கள், டிசம்பர் 31, 2012

கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் : ரேணுகா சவுத்ரி !

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி டெல்லி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து இக்குற்றங்களை தடுக்க க்டுமையான சட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மாணவி வன்கொடுமைக்கு ஆளானதை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து,பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எவ்வகையான
சட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து பரிந்துரைக்குமாறு ஜே.எஸ்.வர்மா கமிட்டியை மத்திய அரசு நியமித்தது.  கடந்த 25 ஆம் தேதியன்று நியமிக்கப்பட்ட இக்கமிட்டி,தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 30 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இதனிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில்,இச்சட்ட திருத்தத்தில் பரிந்துரைக்க வேண்டிய தண்டனை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழுவின் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் பற்றிய விபரங்கள் மெல்ல கசியத் தொடங்கியுள்ளன.
அதன்படி,பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற ரேணுகா சவுத்ரி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.
டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதையடைய சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டுக்கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இளம்சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்பப்படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி 18 வயது நிறைவடையாதவர்கள் இளம் குற்றவாளிகள் என்ற தற்போதைய சட்ட நடைமுறையை திருத்தி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவதுபோல் சம தண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டது என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன்.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் நல வாயிலாக மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், இதற்கென அமைக்கப்பட்டுள்ள வர்மா கமிஷனின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக