செவ்வாய், டிசம்பர் 25, 2012

காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை !

திருத்துறைப்பூண்டி: காவிரி டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டியில் நெற்பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருத்துறைப்பூண்டி மேலகொற்கையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன். சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை நம்பி காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர். தமது வயலில் நீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் நொந்த கோபாலகிருஷ்ணன், வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள மரத்தில் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைகள் தொடர் கதையாகிவரும் நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்திருப்பது காவிரி டெல்டாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக