சனி, டிசம்பர் 29, 2012

பாஜக அலுவலகத்தில் ஒரு பலாத்காரம் !!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலைநர் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மாணவி ஒருவரை ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய
நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே பாஜக அலுவலகத்தில் வைத்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பரஸ்வாரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த 17-ம் தேதி மதியம் உள்ளூரில் உள்ள பரஸ்வாரா பகுதி பாஜக அலுவலகத்திற்கு நான் இன்டர்நெட் பார்க்க சென்றேன். அப்போது அங்கு வந்த எனது உறவினர் என்னை அங்கு உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். உள்புறமாக கதவை தாழ்ப்பாள் போட்டு என்னை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்று விட்டார். வெளியே சொன்னால் சமுதாயத்தில் அவமானமாகப் பார்ப்பார்கள் என்று நானும் மவுனமாக, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக