திங்கள், டிசம்பர் 24, 2012

10 அமெரிக்கர்களை கொன்றதாக தாலிபான் அறிவிப்பு !

காபூல்:ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹர் மாகாணத்தில் நேட்டோ படையினர் மீது நடத்திய தாக்குதலில் 10 அமெரிக்க ராணுவத்தினர் பலியானதாக தாலிபான் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாக்-ஆப்கான் எல்லையில் உள்ள தொல்காமிற்கு சென்றுகொண்டிருந்த நேட்டோ படையினர் மீதுதான் தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது. மோதல் ஒரு மணிநேரம் நீடித்தது என்றும், ராணுவத்தினருடன் 3 சிவிலியன்களும் கொல்லப்பட்டதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது. தாக்குதல்
குறித்து நேட்டோ பதில் அளிக்கவில்லை. ஆப்கானில் இவ்வாண்டு மட்டும் 396 நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக