வெள்ளி, டிசம்பர் 28, 2012

வீடு புகுந்து வெட்டுவார்கள் - ராமதாஸ் !

சேலம்: சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் நடந்த அனைத்து ஜாதி பிரதிநிதிகளின் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். வருகிற 24ம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் அமைதி வழி போராட்டம் நடத்தப்படும். என்னை ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தகுதியும் உரிமையும் யாருக்கும் இல்லை. அனைத்து ஊர்களிலும் காதல் திருமணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்காக நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும். சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக