ஞாயிறு, டிசம்பர் 23, 2012

TNTJ நிர்வாகிகளை காட்டுமிராண்டி தனமாக தாக்கிய போலிஸ் !

21 ஆம் தேதி உலகம் அழியாது” என்ற நோட்டிசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது. இதை எதிர்த்து "முஸ்லிம்கள் மத கலவரத்தை தூண்டுகின்றனர்"  TNTJ நிர்வாகிகளை கைது செய்! என இந்து முன்னனியினர் "போட்டி நோட்டிஸ்" வெளியிட்டனர். ஹிந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களின் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து TNTJ நிர்வாகிகளை "D1" காவல் நிலைய "AC" செந்தில் குமரன் கைது செய்தார். அப்போது, பெண்களை கேவலமாக பேசி, போலீசார் அராஜகம் செய்ததாக கூறப்படுகிறது இதை கண்டித்து, AC செந்தில் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்று மாலை 4 மணியளவில் சென்னை திருவல்லிகேணியில் உள்ள D1 காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, TNTJ நிர்வாகிகள் ஆர்பாட்டம் செய்தனர். போராட்டம் நடத்திய
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சார்ந்தவர்கள் மீது பெண்கள் - குழந்தைகள் என்றும் பாராமல், போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக