புதன், டிசம்பர் 26, 2012

சாலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது: 2 பேர் பலி !

மியான்மரில் விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 2 பேர் பலியாயினர், 11 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரிலிருந்து ஹீஹோ என்ற நகருக்கு 65 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திடீரென விமானம் சாலை பகுதியில் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சாலையில் சென்று
கொண்டிருந்த 2 பேர் பலியானார்கள், 11 பேர் காயமடைந்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக