
மேலும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மி்ன்சாரமும் குறைந்த அளவு தான் கிடைக்கிறது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு 2,481 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இந்நிலையில் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க கால தாமதம் ஆகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் மின்தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் மின்தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவும் இம்மாத இறுதியில் குறைந்துவிடும் என்பதால் மின்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் இன்னும் சில வாரங்களில் பல மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் சூழல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக