கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக மூத்த காங்கிரஸ் தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்கிறார்கள். இதனால் பெட்ரோலியத்துறைக்கும், வெளியுறவுத்துறைக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம்.
இந்த அமைச்சரவை மாற்றங்கள் இந்த மாத இறுதியில் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராசாவும், தயாநிதி மாறனும் அமைச்சர் பதவிகளை விட்டு விலக நேர்ந்த நிலையில் அவர்களுக்குப் பதிலாக திமுகவைச் சேர்ந்த வேறு யாருக்கும் பதவிகள் தரப்படவில்லை.
மம்தா பானர்ஜி போல் அல்லாமல் எல்லா விவகாரங்களில் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி மிக ஆதரவாக இருந்து வருவதால், திமுகவுக்கான கேபினட் பதவிகளை மீண்டும் அந்தக் கட்சிக்குத் தர சோனியா முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ராசா, தயாநிதி ஆகியோருக்குத் தரப்பட்ட கேபினட் அமைச்சர் பதவிகள் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படலாம்.
இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரில் இருவரை மத்திய கேபினட் பதவிக்கு கருணாநிதி நியமிக்கலாம் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக