செவ்வாய், ஏப்ரல் 17, 2012

ப.சிதம்பரம் - ஜெயலலிதா சந்திப்பு !

 உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு இன்று காலை டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். உத்தரப் பிரதேசத்தில் புதிய முதல்வராகப் பொறுபேற்றுக் கொண்ட அகிலேஷ் யாதவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா கடந்த வருடம் டெல்லி வந்த போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக