ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

சுனில்ஜோஷி கொலை வழக்கு: ஹிந்துத்துவா தீவிரவாதி பிரக்யாசிங்கை விசாரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை!


ஜபல்பூர்;ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரை மே 2-ஆம் தேதி வரை விசாரிக்க மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமக்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எனவே என்.ஐ.ஏ. தம்மை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரக்யா சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் விசாரித்த நீதிபதி ஜி.எஸ். சோலங்கி நேற்று(வெள்ளிக்கிழமை) மே 2-ம் தேதி வரை பிரக்யா சிங்கை விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக