ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு பயிற்சி முகாம்

இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான தீவிரவாத   பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக இந்து முன்னணி தீவிரவாத அமைப்பு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதமாற்றத்தைத் தடுத்திட பண்பாட்டைப் பாதுகாத்திட பயங்கரவாதத்தை முறியடித்திட, இந்து விரோதிகளை வேரறுத்திட, கிராமங்கள் தோறும் இந்து முன்னணி பேரியக்கத்தின் கிளைகளைத் துவக்கி இந்துக்களை ஒன்றுபடுத்திட ,
ஜாதி மோதல்களைத் தடுத்திட, இந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட சுவாமி விவேகானந்தர் கண்ட கனவினை நனவாக்கிட இளைஞர்களுக்கு இந்து முன்னணி ஆண்டுதோறும் பயிற்சி அளித்து வருகிறது" என்றும்
”இவ்வருடப் பயிற்சி முகாம்கள் வேலூரில் நடைபெற இருக்கிறது. முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மாநில இந்து முன்னணி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக