செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கம்யூனிஸ்டுகளிடம் பேசவோ, குடும்பத்தில் திருமணம் செய்யவோ கூடாது : திரிணாமுல் கட்டளை !

கொல்கத்தா : தன் கட்சி தொண்டர்கள் மார்க்ஸிட் கம்யூனிஸ்டு தொண்டர்களிடம் பேச கூடாது என்றும் அவர்களின் குடும்பத்தில் திருமணம் செய்யவோ கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்டளை இட்டுள்ளது.ஹப்ராவிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய உணவு அமைச்சர் ஜோதி பிரியா முல்லிக் "சிபிஎம் கட்சியினருடன் பேச வேண்டாம். டீ கடையில் சந்தித்தால் கூட பேச வேண்டாம். சமூக ரீதியாக அவர்களை ஒதுக்கி வைக்க முடிவு செய்து விட்டோம். அவர்களின் வீடுகளிலோ அல்லது அவர்களின் உறவினர்களின் வீடுகளிலோ பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ
கூடாது" என்று கூறினார்.

சிபிஎம் கட்சியினரை சமூக ரீதியாக ஒதுக்க மம்தா நினைப்பதாக சில காலமாகவே செய்திகள் அடிபட்டு கொண்டிருந்த நிலையில், பகிரங்கமாக அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் வர உள்ள நிலையில் காங்கிரஸை கழட்டி விட்டு தனியே திரிணாமுல் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதும் குறிப்ப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக