வெள்ளி, ஏப்ரல் 27, 2012

சிரியாவில் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலி

ஹாமா:சிரியாவில், நேற்று ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 70 பேர் பலியாயினர்.சிரியாவில், அதிபர் பஷீர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, ஓராண்டுக்கும் மேலாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ராணுவத்தினர் ஒடுக்கி வருகின்றனர். இதில், பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஹாமா மாகாணத்தின் மாஷா அல் தயார் மாவட்டத்தில், போராட்டக்காரர்களால் ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், அந்த கட்டடம் தரைமட்டமானது.உள்ளே இருந்த வெடிமருந்து பொருட்கள் வெடித்ததில், 70 பேர் வரை பலியாகியுள்ளனர். ஆனால், 16 பேர் மட்டும் பலியானதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக