புதன், ஏப்ரல் 24, 2013

மலேசியா: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நஜிப் !

  • மலேசியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சாபா மாநிலத்தில் உள்ள கோலா பென்யு நகருக்கு நஜிப் வருகையளித்தபோது அவரின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.
  •  
  • வேட்பு மானு தாக்கல் நாளான ஏப்ரல் 20ம் தேதி பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர்.
  • மே 5ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணிக்கும் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் இல்லாத அளவுக்குத் தேசிய முன்னணி இந்தத் தேர்தலில் கடும் சவாலை எதிர்நோக்குகிறது. எதிர்க்கட்சி வசம் உள்ள கெடா, சிலாங்கூர் மாநிலங்களை இந்த முறை கைப்பற்ற தேசிய முன்னணி ஆர்வம் கொண்டுள்ளது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக