சனி, ஏப்ரல் 27, 2013

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு! முஷரஃபை ஏப்ரல் 30 வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரஃபை புலனாய்வுத்துறை இம்மாதம் 30-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், முஷரஃபிடம் விசாரணை நடத்த கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹபீப் ரஹ்மான், முஷரஃபிடம் விசாரணை நடத்த இம்மாதம் 30-ஆம் வரை அனுமதி அளித்தார்.
இதையடுத்து முஷரஃபின் பாதுகாப்பு கருதி, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பண்ணை வீட்டில் விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நன்றி : நியூ இந்திய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக