புதன், ஏப்ரல் 24, 2013

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்! முன்னாள் விமானப்படை தளபதி வங்கிக் கணக்கு முடக்கம்!

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் தரகர்கள் மூலமாக 3600 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதுத் தொடர்பாக, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து தியாகி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரின் வங்கிக் கணக்குகளையும் சி.பி.ஐ முடக்கியுள்ளது.
நன்றி : நியூ இந்திய 
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக