திங்கள், ஏப்ரல் 22, 2013

டெல்லியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் !

நாட்டின் தலைநகரான டெல்லி தற்போது பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகராவும் உருவெடுத்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், டெல்லியில் இந்த ஆண்டு ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து மார்ச் 31ந் தேதி வரை 393 பாலியல் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. இம்மாதம் 14-ந் தேதி மேற்கு டெல்லி சுல்தான்புரியில் பேருந்துக்குள் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15-ந் தேதி 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மனோஜ்குமார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
 
17-ம் தேதி கிழக்கு டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நாளில் கிழக்கு டெல்லி ஜகத்புரி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர் பிரமோத் கைது செய்யப்பட்டார். 
 
 18-ந் தேதி மேற்கு டெல்லி நஜஃப்கர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 661 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக