திங்கள், ஏப்ரல் 15, 2013

வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்னரே தீவிர வாக்கு வேட்டையில் கட்சிகள் !

  • கோலாலம்பூர்: வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் ஐந்தாறு நாட்கள் இருக்கும்போதே மலேசிய அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டனர். அவர்களில் முன்னிலையில் இருப்பவர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் தான். இம்மாதம் 3ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்தே அவர் பிரசார சுற்றுப்பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
  •  
  • மலேசியாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமது மக்கள் முன்னணிக்கு வாக்கு வேட்டையாடிய அன்வார், கிழக்கு மாநிலமான சாபாவையும் விட்டுவைக்க வில்லை. 65 வயதாகும், இரு பேரக் குழந்தை களுக்குத் தாத்தாவான அன்வார், மலேசியாவின் பிரதமர் ஆவதற்கான கடைசி வாய்ப்பை இந்தப் பொதுத்தேர்தல் வழங்கியுள்ளது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக