திங்கள், ஏப்ரல் 29, 2013

நிஜ முகத்தை மறைக்க முகமூடியை பயன்படுத்துகிறார் நரேந்திர மோடி! : கபில் சிபல் கடும் தாக்கு!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள பாலேவாடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கருத்தரங்கில் பேசிய மத்திய மந்திரி கபில் சிபல் கூறியதாவது:- 

மோடிக்கு டெல்லி வெகு தூரம். அவரை டெல்லிக்கு வர யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜ.க.வில் பிரதமர் பதவியை குறி வைத்து பலர் உள்ளனர். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாக ஒருவர் (அத்வானி) நாற்காலி கனவுடன் நின்றுக்கொண்டே இருக்கிறார்.

தனது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நரேந்திர மோடி, தவறான புள்ளி விவரங்களை கூறி வருகிறார். 

ஆனால், உண்மை என்னவென்றால், புறநகர் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தொகையின் எண்ணிக்கையும், ஊட்டச் சத்து குறைபாடும் குஜராத்தில் பெருகிக் கொண்டே போகிறது. 

குஜராத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் அது குஜராத் மக்களால் ஏற்பட்ட வளர்ச்சியே ஒழிய, மோடியால் ஏற்பட்ட வளர்ச்சி அல்ல. தனது நிஜ முகத்தை மறைக்க முகமூடியை அணிந்துக்கொள்கிறார், மோடி. அவருக்கு அருகில் சென்று பார்த்தால் தான் அவரது நிஜ முகம் வெளிப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக