ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

சோனியா, ஷிண்டே இல்லம், போலீஸ் தலைமையகம் முற்றுகை !

  • கிழக்கு தில்லி காந்தி நகரில் உள்ள குடியிருப்பில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தில்லியின் முக்கிய இடங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  •  

  •  தில்லி போலீஸ் தலைமையகத்தையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தையும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவின் இல்லத்தையும் முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
  •  

  •  போராட்டத்தின் எதிரொலியாக இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியா கேட்டை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்புகளில், மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 
  •  

  • எய்ம்ஸ் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக