ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

இந்தியாவில் தொடரும் காமக்கொடுரனின் அட்டுழியம் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசும் !

  • டெல்லியில் 5 வயது சிறுமியை 2 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த குற்றவாளியை பீகார் மாநிலம் முசாபர்பூரில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 
  •  
  • டெல்லி காந்தி நகர் ஏரியாவில் 4 நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி காணாமல் போனாள். இது தொடர்பாக அவளது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டை ஒட்டிய மற்றொரு வீட்டின் அறையில் இருந்து அழுகுரல் கேட்டது. பூட்டியிருந்த அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடந்தாள். உடனடியாக அவளை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவளது மர்ம உறுப்பில் காயம் பலமாக இருந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, அந்த  வீட்டில் குடியிருந்த குமார் என்பவர் தலைமறைவானார். செல்போன் நம்பரை வைத்து அவர் பீகாரில் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் மாநிலம் முசாபர்பூர் விரைந்தனர். மாமியார் வீட்டில் ஒளிந்திருந்த குமாரை லோக்கல் போலீஸ் துணையுடன் டெல்லி போலீசார் இன்று அதிகாலை 2 மணிக்கு கைது செய்தனர். இன்று காலை அவரை முசாபர்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு டெல்லி கொண்டுவருகின்றனர்.
  •  
  • இதற்க்கெல்லாம் சரியானதீர்வுதான் என்ன இந்தியா அரசு விளித்துக் கொல்லும்மா ? 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக