திங்கள், ஏப்ரல் 15, 2013

ஹோட்டலில் தீ பற்றி 11 பேர் மரணம் !

  • மத்திய சீனாவில் ஒரு ஹோட்டலில் பரவிய தீயில் 11 பேர் கருகி மாண்டனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
  •  
  •  ஹூபேய் மாகாணத்தின் ஸியாங் யாங் நகரத்தில் நேற்றுக் காலை 6.30க்குப் பற்றிய தீ, காலை 9 மணிவரை மளமளவென்று எரிந்து பரவியது என்று சின்ஹுவா செய்திக் கூறியது.
  •  
  • ஐந்து மாடி ஹோட்டலின் கீழ்த் தளத்தில் இருந்த ஓர் இணையச் சேவை அங்காடியில் தீ கிளம்பியது என்று தீயணைப்பாளர்கள் கூறினர். முதல் இரண்டு மாடிகளில் இணையச் சேவை அங்காடியும் அதற்கு மேல் மூன்று மாடிகளில் ஹோட்டலும் இருப்பதாக அவர் களுள் ஒருவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக