வெள்ளி, ஏப்ரல் 26, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் நடுநிலையான புலனாய்வு விசாரணை தேவை பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை !

  • கடந்த ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரில் குண்டு வெடித்தது. 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது மனித இனத்திற்கு எதிரான குற்றம். வன்மையாக கண்டிக்கத்தக்கது. குண்டுவெடிப்பு சம்பத்தப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு சார்பாக இல்லாமல் நடுநிலையாக நடக்க வேண்டும். இதுவரை நாட்டில் நடைபெற்ற அநேக குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் சங்க பரிவார இயக்கங்களே காரணம் எனபது ஊர்ஜிதம் செய்யப்பட உண்மை. இதை இந்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்கள் காவி பயங்கரவாதம் என்று சுட்டிகாட்டியுள்ளார்.

    ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட 26 முஸ்லிம்கள் பின்பு நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்,. ஆந்திரா அரசு அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க தற்போது முன்வந்துள்ளது. அனால் அன்று நடந்த ஒரு சார்பு விசாரணையால் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர்.

    அதைப்போல பெங்களூரில் நடைபெற்று வரும் விசாரணை அமைந்து விடக் கூடாது. குண்டுவெடிப்பை முஸ்லிம்கள் தான் செய்து இருப்பார்கள் என்ற ரீதியிலேயே விசாரணை நடைபெற்று வருவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் லாபத்திற்காக இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். அனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது. இதுதான் இந்தியாவின் நீதிக்கான முத்திரை வாக்கியம். எனவே நடுநிலையான புலனாய்வு தேவை. சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை பாப்புலர் பிரண்ட் கேட்டுக் கொள்கிறது.

    இப்படிக்கு,
    ஆ. ஹாலித் முஹம்மது
    மாநில பொது செயலாளர்
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
    தமிழ்நாடு.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக