செவ்வாய், ஏப்ரல் 16, 2013

பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு முலாயம் சிங் யாதவ் உடந்தை !

  • பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு முலாயம் சிங் யாதவ் உடந்தையாக இருந்ததாக் மத்திய அமைச்சர் பேணிபிரசாத் வர்மா குற்றம் சாட்டியுள்ளது
  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  •  
  • லக்னோவில் பேசிய பேணி பிரசாத் வர்மா, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அத்வானி போன்றவர்களை அப்போதைய முதலமைச்சர் முலாயம் சிங் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அதற்குப் பிறகு தான் பாபர் மசூதி பகுதிக்குள் கர சேவகர்களை அனுமதிக்க முலாயம் சிங் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
  •  
  • பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானியும், குஜராத் கலவரத்திற்கு மோடியும் தான் காரணம் என்று கூறிய அவர் , மேலும் இந்த இருவரும் தான் நாட்டின் மத சார்பின்மையை குலைத்தவர்கள் என்றும்  அவர் தெரிவித்துள்ளார். ஐ.மு கூட்டணிக்கு முலாயம் சின்கி கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக