
இது குறித்து கருத்து தெரிவித்த RSS-ன் பத்திரிக்கை தொடர்பாளர் ப்ரதீப் ஜெயின், இது முழுக்க முழுக்க RSS கூட்டம் என்றும், வேறு யாரும் அழைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். எனினும் முதல்வர் மோடி அலுவலகத்திலிருந்து RSS தலைவர்களைச் சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டதாகவும், எனினும் சந்திப்பிற்கான நேரம் RSS தலைவர்களால் ஒதுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று தனது அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் மோடிக்கு, இது அரசியல் ரீதியான பின்னடைவாக கருதப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த RSS தலைவர் ஒருவர், குஜராத் முன்னாள் முதல்வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை விட்டு விலகிய முக்கிய தலைவரான கேசுபாய் பட்டேலுடன் மோடி சமரசம் செய்துகொள்ளுமாறு RSS கட்டளையிட்டதாகவும், இதற்கு மோடி மறுத்து விட்டதாகவும், இதனால் RSS அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குஜராத் கலவரம் குறித்து விசாரணை முடிவுகள் அனைத்தும் மோடியை நோக்கி இருந்து வருவதால், இதிலிருந்து RSS விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக