ஞாயிறு, மே 13, 2012

ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தப் பெண் கைது!

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக இமெயில் மிரட்டல் விடுக்கப் பட்டதை அடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மிரட்டல் மெயில் புரளி   எனத் தெரிய வந்தது. 

மதுரையில் பாஜக மாநாடு நடைபெற்று வந்த நிலையில் மிரட்டல் மெயிலும் வந்தது காவல்துறையை பரபரப்பாக்கியது. அதையடுத்து மிரட்டல் மெயிலை அனுப்பியவர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பல்கலைக் கழகத்தின்  விடுதி ஒன்றில் பணியாற்றும் வசந்தா என்பவரைக் கைது செய்துள்ளனர்.

தமது கணவர் மீது உள்ள கோபத்தில் அவரை போலீசில் சிக்க வைப்பதற்காக மிரட்டல் இ மெயில் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  அண்மையில் சாஸ்திரி பவனில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளது என்று வந்த மிரட்டலில் உளவுத்துறை போலீஸ் ஒருவரே சிக்கியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக