
இச்சட்டத்தின் மூலம் அனுமதியில்லாமல் நுழைவது, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, வேட்டையாடுவது, மது பானங்கள் அருந்துவது, எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்வது, நோய்கிருமிகளை பரப்புவது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்பர் சோன் என்றழைக்கப்படும் பகுதிக்குள் விளம்பர படம் வைப்பதும் குற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்பர் சோன் என்பது ஜார்வா பழங்குடியினர் வாழும் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதி ஆகும். இச்சட்டத்தை மீறுவோர் மீது 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கமுடியும், மேலும் ரூபாய் 10000 வரை அபராதமும் விதிக்க முடியும் என அம்பிகா சோனி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக