வியாழன், ஜூன் 06, 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது!

கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்ட் என்.கே அமீனை, நேற்று சிவில் மருத்துவமனையில் வைத்து சி.பி.ஐ கைது செய்தது.

சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமீன், தனது உடல் நிலையை காரணங்காட்டி ஜாமீன் பெற்று சிகிட்சைப் பெற்று வந்தார். போலி என்கவுண்டர் நடைபெறும் வேளையில் போலீஸ் குழுவில் இடம்பெற்றிருந்தார் அமீன். மேலும் இவரிடம் விசாரணை நடத்துவதற்காக காந்தி நகர் அலுவலகத்திற்கு சி.பி.ஐ கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் சொராஹ்புதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முன்னால் டி.ஐ.ஜி, வன்சாரா கைது செய்யப்பட்டுள்ளார்.
Source : Newindia.tv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக