வெள்ளி, ஜூன் 07, 2013

மிகப்பெரிய கலவரத்துக்கு காரணம்மான காதல் ஜோடி பிரிந்தது !


தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்தாண்டு ஆகஸ்டு 8ம் தேதி இளவரசன், திவ்யா இருவரும் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்று புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைதொடர்ந்து தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. 10 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று போலீசில்  இளவரசன் புகார் கொடுத்தார்.

புகார் நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது நீதிமன்றம் விசாரணையில் நீதிபதிகளை பார்த்து திவ்யா கதறி அழுதார். என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன் என்று அழுதபடியே கூறினார்.

படிப்பினை பெறட்டும் உல்லாச காதலர்கள் இந்த காதல்ஜோடியினால் தர்மபுரி பற்றி எரிந்தது பல உயிர்கள் சேதம் வீடுகளுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது பெண்ணின் தந்தை மரணம் இப்படி சிந்திக்காமல் ஆசையின் காரணத்தினால் யாரு எப்படி போனால் என்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் இல்லாத காதலர்களே சிந்தியுங்கள் திருந்துங்கள். 3


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக