செவ்வாய், ஜூன் 18, 2013

முஸ்லிம்களை ஏமாற்ற ஜூன் 23-இல் பா.ஜ.க நடத்தும் மாநாடு!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை, பாபரி மஸ்ஜித் இடிப்பு என்று முஸ்லிம்களின் உயிர், உடைமைகள், வழிப்பாட்டுத்தலங்களை அழித்து தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சதித்திட்டங்களை அரங்கேற்றி வரும் பாசிஸ்டுகளின் பாசறையில் உருவான அரசியல் கட்சி பா.ஜ.க. இக்கட்சி தேர்தல் நேரங்களில் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிப்பது வழக்கம். அவ்வகையில் வருகிற மக்களவை தேர்தல் மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி டெல்லியில் ஜூன் 23-ஆம் தேதி முஸ்லிம் மாநாட்டை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாம். இத்தகவலை பா.ஜ.கவில் முஸ்லிம் பெயர் தாங்கியான ஷாநவாஸ் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.


இதுக்குறித்து டெல்லியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஷாநவாஸ் ஹுஸைன் கூறியது: டெல்லியில் பாஜகவின் முதல்வராக சாஹிப் சிங் ஆட்சி நடத்தியபோது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.  அத் திட்டங்களைக் காங்கிரஸ் அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தவில்லை.

சமூகத்தில் பின்தங்கியவர்களையும்,  சிறுபான்மை மக்களையும் காங்கிரஸ் அரசு புறக்கணித்துவிட்டது. பாஜக குறித்து முஸ்லிம்களிடம் பொய்ப் பிரசாரம் செய்வதன் மூலம் அவர்களைக் காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது. ஆனால், காங்கிரஸின் திட்டம் இப்போது அம்பலமாகிவிட்டது.

டெல்லி கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்திடமும், சிறுபான்மை மக்களிடமும் கட்சியைக் கொண்டு செல்ல பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ஜூன் 23-ஆம் தேதி தால்கடோரா அரங்கில் டெல்லி முஸ்லிம்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது என்றார் ஷாநவாஸ் ஹுசைன்.

முஸ்லிம்கள் பா.ஜ.கவின் ஏமாற்று சூழ்ச்சிகளுக்கு பலியாகமாட்டார்கள் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக