வெள்ளி, ஜூன் 21, 2013

இந்தோனேசியா காட்டுத் தீ புகையால் சிங்கப்பூர் நகர மக்கள் பாதிப்பு!

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த ஒரு வார காலமாக எரிந்து வரும் காட்டுத் தீக்கு சிங்கப்பூர் நகரம் புகையால் சூழப்பட்டுள்ளது. இதனால் காற்று மண்டலம் மாசு அடைந்து அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோத காட்டுத் தீ  என சிங்கப்பூர் கருதுவதினால் இந்த  இரு நாடுகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முடிவு காண இருதரப்பு அதிகாரிகளும் இன்று ஜகார்த்தாவில் கலந்து ஆலோசித்தனர்.

இது குறித்து ஜகர்த்தா நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதோடு, சிங்கப்பூர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் விதத்தில் காற்றை மாசுபடுத்த எந்த ஒரு நாட்டுக்கும் எந்த ஒரு நகராட்சிக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் கூறினார்.

இக் குற்றச் சாட்டுகளை மறுத்த இந்தோனேசியா, சிங்கப்பூர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கின்றது என்றும், இது இயற்கையின் சீற்றம் என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக