திங்கள், ஜூன் 03, 2013

நரேந்திர மோடியை விட சிவ்ராஜ் சிங் சவுகான் தான் பெஸ்ட் - அத்வானி கருத்து!

குவாலியர் : பின் தங்கி இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை முன்னேற்றம் அடைந்த மாநிலமாக உருவாக்கிய சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்று அடக்கமான மனிதர் என்று பாஜகவின் மூத்தத் தலைவர் எல்.கே அத்வானி பேசியிருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குவாலியரில்  ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்தத் தலைவர் எல்.கே அத்வானி ''வளர்ச்சி அடைந்து இருந்த குஜராத் மாநிலத்தை நரேந்திர மோடி மேலும் முன்னேற்றம் அடையச் செய்ததை நரேந்திர மோடியிடமே அடிக்கடி சொல்லி இருக்கிறேன்.

ஆனால் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய மாநிலங்கள். பின் தங்கிய மத்திய பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றவர் சிவ்ராஜ் சிங் சவுகான். இருப்பினும் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்று அடக்கமாக இருக்கிறார்'' என்று பேசினார்.

குஜராத் அபரிமிதமான வளர்ச்சி என்று பாஜகவும், ஊடகங்களும் தெரிவித்து வந்த நிலையில் குஜராத் ஏற்கனவே வளர்ச்சி கண்ட மாநிலம் என காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. தற்போது காங்கிரஸ் கட்சியின் கருத்தையே எல்.கே அத்வானியும் கூறி இருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக