சனி, ஜூன் 22, 2013

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும்! : முதலமைச்சர்

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும் என முதலமைச்சர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். டேராடூனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் நீண்ட காலம் ஆகும் என கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கேதர்நாத்திற்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள சாத்தியமே இல்லை எனவும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.
இதுவரை 556 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி புதையுண்டு போயிருக்கக்கூடும் என கவலை தெரிவி்த்தார்.
ஹிமாலய வரலாற்றில் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதில்லை என விஜய் பகுகுணா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக