சனி, ஜூன் 08, 2013

விரைவில் வெடிக்க இருக்கும் மோடி ‘பலூன்’ : சரத்பவார்!

இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டு தோல்வியை தழுவிய மோடியை, அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பலூனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்வார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எனது 40-50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அளவுக்கு அதிகமாக ஊதப்பட்ட பல பலூன்கள் விரைவில் வெடித்ததை பார்த்திருக்கிறேன்” என்றார். 


அரசியல்வாதிகள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது தொடர்பாக சரத்பவாரிடம் கேட்டபோது, “அரசியல்வாதிகள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் மாட்டேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக