
புதிய கட்டண உயர்வு பத்திரிகைகள், நாளிதழ்கள், மருந்துப்பொருட்கள், பயறு வகைகள், மாவு வகைகள் போன்ற அனைத்துக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்காமல், இப்போது பார்சல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதே? என அந்த அதிகாரியிடம் கேட்டபோது அவர், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டண உயர்வு செய்வதற்கு ரெயில்வே அமைச்சகத்துக்கு ரெயில்வே சட்டம் அனுமதி வழங்கி உள்ளது என பதில் அளித்தார்.
ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு ஸ்டேண்டர்டு, பிரிமியம், ராஜ்தானி என மூன்று பிரிவுகளில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, எக்ஸ்பிரஸ் ரெயில் அல்லாத பிற சாதாரண ரெயில்களில் அனுப்பப்படுகிற பார்சல்கள் ஸ்டேண்டர்டு பிரிவின் கீழும், எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்கள் பிரிமியம் பிரிவின் கீழும், ராஜ்தானி, சதாப்தி சொகுசு ரெயில்களில் அனுப்பப்படுகிற பார்சல்கள் ராஜ்தானி பிரிவின் கீழும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக