
495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்மிதா(நெல்லை), சூர்யா(சிவகாசி), அபிஷேக்(சிவகாசி), தரணி(பொள்ளாச்சி), வி்ண்மிதா(ஈரோடு), ஷர்மிளா(ஈரோடு), ஜஸ்டின் சேவியர்(பொன்னேரி), ராஜேஸ்வரி(காஞ்சிபுரம்), அம்ரிதா (திருப்பத்தூர்), ஸ்ரீதரா(நாமக்கல்), பூஜாஸ்ரீ(புரசைவாக்கம்) ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
கணிதம்: 1141 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 12,532)
அறிவியல்: 9237 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 3677)
சமூக அறிவியல்: 5,305 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 256)
ஆங்கிலம்: 3 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதன் முறையாக நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக