
அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் மற்றும் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வீடுகளை இழந்துள்ள மக்கள் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
"எங்கள் மீது கருணை காட்டுங்கள், தயவுசெய்து தானம் அளியுங்கள்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பிச்சை எடுக்கின்றனர்.
இதற்கிடையே நிவாரண பணிகளுக்காக சர்வதேச நாடுகளின் உதவியை பிலிப்பைன்ஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக