திங்கள், டிசம்பர் 19, 2011

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, தனி விமானத்தில், பலத்த பாதுகாப்புடன், நள்ளிரவில் நாடு திரும்பியுள்ளார்.

கராச்சியில் வந்திறங்கிய 56 வயதான சர்தாரிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி, அதிபர் சர்தாரி, திடீரென துபைய்க்கு சென்றதால், பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படும் என்றும் அதிபர் பதவியில் இருந்து சர்தாரி நீக்கப்படுவார் என்றும்
தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்த நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் கிலானியும் ராணுவ தளபதி கியானியும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாகவே, உடனடியாக சர்தாரி நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக