வெள்ளி, டிசம்பர் 30, 2011

கன மழையில் சிக்கிய சீர்காழி- நாகை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிப்பு!

Sirkazhiசீர்காழி: கன மழையால் நாகை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி நகரம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தானே புயல் எதிரொலியாக பெய்து வரும் கன மழையால் கடலோர மாவட்டமான நாகையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பெய்து வரும் கன மழையால், சீர்காழி நகரம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.



சீர்காழியிலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை இடையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மயிலாடுதுறை-காரைக்கால் இடையிலான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக