வியாழன், டிசம்பர் 22, 2011

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை கடற்படை


இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ) இலங்கை கடற்படை விடுதலை செய்தது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் கடற்கரையிலிருந்து கடந்த 19 ம் திகதி 22 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.அடுத்த நாள்(20.12.2011) கரை திரும்ப வேண்டிய இவர்கள் கரை திரும்பவில்லை. கடலில் பலத்த காற்று வீசியதால் இவர்களது
படகு இலங்கை நெடுந்தீவு மற்றும் கோபுரத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது.
இதையடுத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணைக்குப் பின் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விடுதலை செய்ய நீதிபதி ஜாய்மகிழ் மகாதேவன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களை தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப மீன் வளத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக