செவ்வாய், டிசம்பர் 27, 2011

பிரதமருக்குக் கறுப்பு கொடி: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கைது!


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டித்தும், மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும்
4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும் தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு சென்னையிலும்
காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை தமுமுக நடத்தும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் காரைக்குடி செல்லும் வழியில் திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சியினர் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 750 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்., காரைக்குடியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில்  மனிதநேய மக்கள் கட்சியினர் 350 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக