சனி, டிசம்பர் 24, 2011

இந்திய தடகள வீராங்கனை அஷ்வினி அக்குன்ஜி உட்பட 6 பேருக்கு ஓரு வருடம் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது

காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அஷ்வினி அக்குன்ஜி, மந்தீப் கவுர், சினி ஜோஸ் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அஷ்வினி அக்குன்ஜி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டை தங்கம் வென்றவர். மேலும், JAUNA MURMA, PRIYANKA PANWAR, TIANA MARY THOMAS ஆகியோருக்கும்
ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதை கண்டறிய நடந்த சோதனையில் இவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து, தேசிய மருந்து தடுப்பு பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக