வியாழன், டிசம்பர் 29, 2011

ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் ஹெர்மூஸா கடல் பகுதியை மூடுவோம் : மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை


ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கப்பட்டால் அந்நாட்டு கடலெல்லையான ஹெர்மூஸ் ஊடாக எண்ணை கப்பல்கள் செல்வது தடுக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹெர்மூஸா கடல் எல்லைப் பகுதியில் ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் ஈரான்
துணை ஜனாதிபதி மொஹம்மட் ரிசா ரஹிமி பங்கேற்று உரையாற்றினார். இதன் போதே அவர் மேற்கு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
‘ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் ஒரு துளி எண்ணை கூட ஹெர்முஸாவி னூடாக செல்லாது’ என்று துணை ஜனாதிபதி ரஹிமி குறிப்பிட்டார். ஈரான் அரச ஊடகமான இர்னா வெளியிட்ட இந்த செய்தியில் ரஹிமி மேலும் கூறியதாவதுஇ
‘நாங்கள் எதிரான செயல்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடவில்லை. ஆனால் மேற்கு நாடுகள் தனது திட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை. எதிரிகளை நாம் முறியடித்தால் தான் அவர் தமது திட்டத்திலிருந்து பின்வாங்குவார்கள்’ என்றார்.
ஹெர்முஸ் ஊடாக நாளொன்றுக்கு 15 மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் பயணிக்கின்றன. இது சர்வதேச சந்தைக்கு நாளொன்றுக்கும் செல்லும் மூன்றில் ஒரு எண்ணெய் பீப்பாய்க ளாகும்.
இந்நிலையில் ஈரான் கடற்படை இந்த பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக